திராட்சை பழரசம் கொடுக்கும் நன்மைகள் !

பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு தடுக்கப்படும். மேலும் இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திராட்சை ஜூஸ் உடலின் மெட்டாபலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் பல மடங்கு மெட்டாபலிசம் அதிகரிக்கும். திராட்சை ஜூஸ் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். 

உடற்பயிற்சி செய்த பின்னர், திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைய காரணமாக அமையும். திராட்சை ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். ரத்தத்தில் கழிவுகளை வெளியேற்றும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக