குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!
பிறந்த குழந்தைகள் அவ்வபோது குடித்த பாலை வாந்திஎடுப்பதுண்டு. ஆனால் சில குழந்தைகள் எந்த நேரமும் வாந்தி எடுத்துகொண்டே இருப்பார்கள் இன்னும் சில குழந்தைகள் குமட்டலோடு இருப்பார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால் எப்போதும் வாந்தி எடுத்துகொண்டு இருந்தால் குழந்தையின் உடலுக்கு எப்படி தாய்ப்பாலுக்கு உண்டான வலு கிடைக்கும். அதனால் ஓரளவு இதை கட்டுக்குள் கொண்டுவர செய்ய வேண்டும். சில குழந்தை வாந்தி எடுக்காவிட்டாலும் கூட குமட்டலை வெளிப்படுத்துவதும் சிறிது பாலை வெளியே கக்குவதுமாய் இருப்பார்கள். இந்த பிரச்சனை பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரையிலும் இருக்கும். தாய்ப்பாலுக்கு பிறகு திட உணவுகள் எடுத்துகொண்டாலும் கூட இந்த பிரச்சனை அதிகரிக்கும். இதனால் எப்போதும் ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு பிறகு என்றால் கை வைத்தியம் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கலாமா? என்ன பாதிப்பு உண்டாகும்! தாய்பால் அல்லது பாட்டில் பால் என்று எதை குடித்தாலும் பாலோடு காற்றும் சேர்ந்து விழுங்குவார்கள், பிறகு காற்றுடன் திரவமும் வெளியேறுவதால் பால் மூக்கு அல்லது வாய் வ...

Comments
Post a Comment